Saturday, 21 November 2015

நிலாவெளிக் கல்வெட்டு

நிலாவெளிக் கல்வெட்டு என்பது, இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள நிலாவெளிப் பிள்ளையார் கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு ஆகும். தொடக்கத்தில் இது எங்கிருந்தது என்று தெரியவில்லை. ஆனால், 20 ஆம் நூற்றாண்டில் பிள்ளையார் கோயில் புதிதாகக் கட்டப்பட்ட காலத்தில் இக்கல்வெட்டைக் கோயில் தீர்த்தக் கிணற்றின் படிக்கல்லாக வைத்துக் கட்டிவிட்டனர். முன்னாள் சாம்பல்தீவுக் கிராமசபைத் தலைவரான செ. தம்பிராசாவின் அழைப்பின்பேரில் நிலாவெளிக்குச் சென்ற கா. இந்திரபாலாவும் செ. குணசிங்கமும் முதன் முதலாக இதைப் படியெடுத்து ஆய்வுசெய்தனர்.[1]

காலம்[தொகு]

இக்கல்வெட்டின் காலத்தை நேரடியாகக் குறித்துக்காட்டக்கூடிய அரசனின் பெயர், ஆட்சியாண்டு முதலிய தகவல்கள் இதன் வாசிக்கக்கூடிய பகுதிகளில் இல்லை. எழுத்துக்கள் சிதைந்து போயுள்ள கல்வெட்டின் மேற்பகுதியில் இத்தகைய விவரங்கள் இருந்திருக்கக்கூடும். ஆனாலும், எழுத்தமைதி, அதில் காணப்படும் தகவல்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இக்கல்வெட்டு இலங்கையில் சோழராட்சியின் தொடக்ககாலத்துக்கு உரியது என மதிப்பிடப்பட்டுள்ளது.[2]

உள்ளடக்கம்[தொகு]

இக்கல்வெட்டு திருகோணமலையில் உள்ள மத்ஸ்யகேஸ்வரம் என்னும் கோயிலுக்கு அன்றாட வழிபாட்டுத் தேவைகளுக்காக வழங்கப்பட்ட தானம் ஒன்றைக் குறிக்கிறது. மத்ஸ்யகேஸ்வரம் என்பது திருக்கோணேஸ்வரம் என இன்று அழைக்கப்படும் கோயிலுக்கு முன்னர் வழங்கிய ஒரு பெயராகும். வழங்கப்பட்ட தானம், கிரிகாமம், கிரிகண்ட கிரிகாமம் ஆகிய ஊர்களில் உள்ள நன்செய், புன்செய் நிலங்களை உள்ளடக்கியிருந்தது.இவ்விரு ஊர்ப் பெயர்களும் இன்று வழக்கில் இல்லை. எனினும், இதில் தரப்பட்டுள்ள தகவல்கள் மேற்படி ஊர்கள் கடற்கரையை அன்றி அமைந்தவை என்பதைக் காட்டுகின்றன. திருக்கோணமலை, கோணமாமலை ஆகிய பெயர்கள் இந்தக் கல்வெட்டில் உள்ளன. இதுவரை அறியப்பட்டுள்ள ஆவணங்களில், திருக்கோணமலை என்ற பெயர் குறிக்கப்பட்டுள்ள மிகப்பழைய ஆவணம் இதுவே. எனினும், திருக்கோணமலையைக் குறிக்கும் கோணமாமலை என்ற பெயர் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாரங்களில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது

பறையன் குளம் எல்லைக்காளியம்மன் கோவில்

பறையன் குளம் 
எல்லைக்காளியம்மன் கோவில்

திருகோணமலையிலிருந்து அனுராதபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் இருபத்தைந்து கிலோமீற்றர் தூரத்தில் முதலிக்குளச் சந்தியிலிருந்து வடக்கே ஒரு சிறு சாலை பிரிந்து செல்கிறது. அந்தச் சாலையில் பத்து கிலோமீற்றர் தூரத்தில் நல்லபிட்டியா என்ற கிராமம் இருக்கின்றது. அங்கிருந்து காட்டுப் பாதையூடாக ஐந்து கிலோமீற்றர் தூரம் சென்றால் பறையன் குளம் எல்லைக்காளியம்மன் கோவிலையடையலாம். இக்கோவிலின் அருகே நல்லபிட்டி ஆறு ஓடிக் கொண்டிருக்கின்றது. இங்கு கோவிலை பார்க்கும் நினைப்போடு அங்கு சென்றால் ஏமாற்றமாகவே இருக்கும். சாஸ்திர ரீதியாக சீரமைக்கப்பட்ட கோவில் அங்கு இல்லை.

பதவியாவில் தழிழர்கள் வாழ்ந்த காலத்தில் இந்த இடம் சைவப்பெருங்குடி மக்கள் வாழ்ந்து மிகவும் பிரசித்திபெற்றிருந்ததை ஊகித்தறியக் கூடியதாக இருக்கின்றது. இவ்வாலயத்தில் அழகிய பத்திரகாளி அம்பாள் சிலாவிக்கிரகம் ஒன்று இருக்கின்றது. இந்த விக்கிரகமே கடந்தகால வரலாற்றைப் பற்றி ஆராய்வதற்கு காரணியாக இருந்து வருகின்றது. இடது காலை மடக்கி வலது காலை தொங்க விட்டபடி சதுர்புஜங்களை கொண்டவராக பீடத்தில் அம்பாள் அமர்ந்திருக்கின்றார். இயற்கையின் தாக்கங்களால் சிலையின் அழுத்தம் சிறிது குறைந்திருந்தாலும் திருவுருவத்தில் பின்னமேற்படவில்லை. 

இந்த இடத்திற்கு “புலிகண்டி” என்று ஒரு பெயரும் வழங்கிவந்திருக்கின்றது. காட்டிற்கு வேட்டையாடச் சென்ற வேடர்கள் புலியில் ஒரு பெண் போவதைக் கண்டு தொடர்ந்து சென்ற போது அது ஒரு குறித்த இடத்திற்கு அப்பால் மறைந்து விட்டதாம். அதனால் அந்த இடத்திற்கு “புலிகண்டி” என பெயரிட்டார்களாம். புலிகண்டகுளம் என ஒரு குளமும் அங்கிருக்கின்றது. பிடாரிஅம்மன் சோலை என்றும் இந்தக் காட்டுப் பிரதேசத்தைக் கூறுவார்கள். இங்கிருக்கின்ற எல்லைக்காளி அம்மனைக் கருத்தில் கொண்டே இந்தப் பெயர்களை இட்டார்களாம். இந்தப் பிரதேசத்தில் பறையன்குளம்ää புலிகண்டகுளம்ää கொக்குவிழுந்தான்ää கற்றுக்கட்டுக்குளம்ää இரணைமடுக்குளம்ää விளாங்குளம்ää குறிஞ்சாக்குளம்ää முதலிய குளங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. ஆதலால் இப்பகுதியில் மக்கள் நீண்ட காலத்திற்கு முன்பே விவசாயம் செய்து வாழ்ந்து வந்திருக்கின்றார்கள் என்பதை ஊகித்தறியக்கூடியதாக இருக்கின்றது.

சுமார் அறுபது வருடங்களுக்கு முன் திரு முத்தையாசாமியார் என்பவருடைய தலைமையில் கோமரங்கடவையில் வாழ்ந்த அப்புக்காமியும்ää தட்டையா என்பவரும் இந்தக் கோவில் இருந்த இடத்தைத் தேடி பல நாட்கள் அலைந்து திரிந்திருக்கின்றார்கள். சிரமங்களையும்ää கஷ்டங்களையும் பொருட்படுத்தாமல் விடாமுயற்சியோடு இந்த பயங்கர வனத்தில் தேடியலைந்த போது இந்தக் காளியம்மன் சிலை கழுத்து மட்டம் வரை மண்ணில் புதைந்திருப்பதைக் கண்டார்கள். இந்த இடத்தையடைவதற்குரிய வழியடையாளங்களை வைத்துக் கொண்டு வந்துää வேண்டிய உபகரணங்களோடு மீண்டும் சென்று நிலத்தை அகழ்ந்த போது காளியம்பாளின் திருவுருவம் நிமிர்ந்தபடியே ஒரு கற்பாறையின் மேல் இருந்ததாம். அகழ்ந்த இடத்தில் சிதைந்த செங்கற்களும் காணப்பட்டன. எனவே இங்கு ஆலயமொன்றிருந்தது பன்னெடுங்காலத்திற்கு முன்னரே இயற்கை ஏதுக்களினாலோ அல்லது வேறு காரணங்களாலோ அழிந்திருக்கலாம். சற்றுத்துரத்தில்எட்டடி உயரமான கருங்கற் தூண்களும் காணப்படுகின்றன. சிதைந்த தூண்களும் சிலவுண்டு.

இந்தக் காளியம்மன் திருவுருவத்தை கண்டு பிடித்தவர்கள் அது இருந்த இடத்திலே வைத்து கொத்துப் பந்தல் அமைத்தார்கள். பின்னர் திரு முத்தையாச்சாமியார் களிமண்ணினாலும்ää கல்லினாலும் சிறு கோவில் கட்டி வழிபட்டு வந்தார். அவருடைய விடா முயற்சியால் மக்களுக்கும் காளியம்பாளில் ஈடுபாடும் பயபக்தியும் ஏற்பட்டது. இந்த ஆலயத்தை சுற்றி இடும்பன்மலைää வெள்ளாட்டிமலைää நாச்சியார்மலைää மச்சமலைää அசுவத்மலைää பிள்ளையார்மலை என பல மலைகளுண்டு. இடும்பன்மலை மிக விசேடமானது. யோகிகள் தவம் செய்த இடம் போல குகைகளையுடையதாய் காணப்படுகின்றது. 

பல ஆண்டுகாலமாக பரிபாலித்து வந்த முத்துச்சாமியார் இந்து இளைஞர் மன்றத்தினரிடம் ஒப்படைத்துள்ளார். இலங்கையை சோழ மன்னர்கள்அ ஆண்ட காலத்தில் திருக்கோணேஸ்வரத்திற்கு இது எல்லைக்காணியாக இருந்ததாம். அதே போல் கந்தளாயிலும்ää சம்பூரிலும் எல்லைக்காணிகள் ஸ்தாபிக்கப்பட்டிருந்ததாக கர்ண பரம்பரைக்கதைகள் இருந்து வருகின்றன.

தென்னமரவாடி

இக்கோவில் கிழக்கு மாகாணத்தின் வடக்கெல்லையில்ää திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலைப் பட்டினத்திலிருந்து 73 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கின்றது. இவ்வாலயத்திற்கு கிழக்குத் திசையில் கடற்கரையோரமாகவுள்ள மலையொன்றில் ஒரு சிவன் கோவில் இருந்ததற்குரிய இடிபாடுகளும்ää சிதைவுருவங்களும் காணப்படுகின்றன. இக்கோவில் கருங்கற் திருப்பணியாய் இருந்ததற்குரிய அடையாளங்கள் காணப்படுகின்றன.

தென்னமரவாடிப் பிள்ளையார் கோவிலுக்கு தென்மேற்கே பறையன் ஆற்றுக்கு அப்பால் மணற்கேணி எனும் இடமுள்ளது. அங்கு சைவ ஆலயமொன்று இருந்து சிதைந்து போன அடிபாடுகளும் காணப்படுகின்றன. தென்னமரவாடி பண்டைக்காலத்தில் தென்னன்-மரபு-அடி என்பது தென்னன்மரபுஅடி ஆக இருந்தது தென்னமரவாடியாக திரிந்து வழங்கி வருகிறது. திருகோணமலை மாவட்டத்தில் பாண்டிய மன்னர்களின் ஆட்சி நடைபெற்று வந்தமைக்கு வரலாறு காணப்படுகின்றன. கோணேசர் கல்வெட்டு மீன் இலட்சினை பொறிக்கப்பட்ட கற்தூண்கள் இதற்கு நான்றாக அமைகின்றது. செம்பயனாறு எனும் ஊர்ப் பெயரும் பாண்டிய மரபு வழிப் பெயராகும். தேன்னமரவாடி ஆலயம் கற்பக்கிரகம்ää அர்த்த மண்டபம்ää தரிசன மண்டபம் கொண்டதாக இருக்கின்றது. கருவறையில் சுமார் 3 அடி உயரமான பிள்ளையார் சிலை பீடத்துடன் காணப்படுகின்றது. அர்த்த மண்டபத்தில் தாமிரத்தாலான பிள்ளையார் விக்கிரகம் வெள்ளி வேலும் அம்மன் சிலாவிக்கிரகமும்ää முஷிகம்ää பலிபீடம் என்பனவுண்டு. 1935ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பெற்று சிறப்பாக பூசை விழாக்கள் நடைபெற்று வந்ததாம். மாதசதுர்த்திää பிள்ளையார்கதை முதலிய அலங்காரப்பூசைகளும்ää சித்திரைமாதத் தொடக்கத்தில் கந்தபுராணப்படிப்பு ஆரம்பித்து நிறைவேற்றுவதும் இங்கு நடைபெற்று வந்ததாம். 1941ம் ஆண்டு பாலஸ்தாபனம் செய்யப் பெற்று இன்னும் திருப்பணி வேலைகள் நடைபெறாமலிருந்து வருகின்றது. இதனால் அலங்காரப்ப10சைகளொன்றும் இப்போது நடைபெறுவதில்லை. ஒரு நாளுக்கு ஒரு ப10சை மாத்திரம் நடை பெற்று வருகின்றது. சைவக்குருக்கள்மாரே தொடர்ந்து இவ்வாலயத்திற்கு பூசைசெய்து வருகின்றார்கள்.

தென்னவரவாடியைச் சுற்றியுள்ள இடங்களைப் பற்றிய வரலாறுகள் காலத்தால் மறைந்தும்ää மறைந்து கொண்டுமிருக்கின்றன. தமிழ் மக்களும்ää சைவசமயமும் இங்கெல்லாம் பரவியிருந்ததென்பதை நினைவு கூர்வது சாலமும் பொருத்தமாயிருக்குமெனக் கருதுகின்றேன்.

தென்னமரவாடியைச் சுற்றிப் பறையன் குளம்ää பறையனாறுää பறையன்வெளிää பறையனோடை எனும் இடங்கள் பழையவரலாறொன்றைக் கூறுகின்றது. பறையனாறு பதவியா குளத்திலிருந்து உற்பத்தியாகிக் கிழக்கேயோடித் தென்னமரவாடிக்கருகாமையில் கடலில் சங்கமமாகின்றது. தற்போது பதவியா என்றழைக்கப்படும் இடத்தில் முற்காலத்தில் சைவத்தமிழ் மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். தமிழ் மன்னராட்சிக்குள் அந்தப் பிரதேசம் இருக்கின்றது. 1965ம் ஆண்டு புதைபொருளாராட்சியாளர்கள் அந்தப் பிரதேசத்தில் அகழ்வாராய்ச்சி செய்தபோது ஒரு தங்கப்பதக்கம் கண்டெடுக்கப்பட்டது. அதனை ஒரு பட்டயமென்றும் கொள்ளலாம். வுட்டவடிவமான அந்தப் பதக்கத்தில் நடுவில் நந்தியும்ää அதற்கிரு பக்கங்களிலும் இரண்டு குத்து விளக்குகளும் மேற்பக்கம் இரண்டு சாமரைகளும் பொறிக்கப்பட்டு கீழ்ப்பக்கத்தில் “மகேஸ்வரப10மிää ஸ்ரீபதிக்கிராமம் பிராமணர்களுக்கு தானம் செய்யப்பட்டது” என்று எழுதப்பட்டிருந்தது. புதைபொருளாராட்சியாளர்களால் எடுத்து செல்லப்பட்ட இந்தப்பதக்கம் தொல்பொருட்காட்சி சாலையில் இருக்கலாம். இதனை விட சிவலிங்கங்களும்ää சிவன்ää அம்பாள் விக்கிரகங்களும் இங்கு கிடைக்கின்றன. பதவியாவிலுள்ள மெரறக்காவää தித்தக்கொணவää காட்டுக்கொல்லாவää ஏராமடு என்னுமிடங்களில் பிள்ளையார் விக்கிரகங்கள் காணப்படுகின்றன.
இந்த பதவியாவைத் தமிழ் மன்னரொருவன் ஆண்ட காலத்தில் பகையரசனொருவன் படையெடுத்து வந்தானாம். மாற்றரசனுடைய படையெடுப்பைத் தடுக்க நினைத்த மன்னன் பதவியாக் குளத்தின் குளக்கட்டைக் “கொழுமோர்” காய்ச்சி ஊற்றி உடைக்கும் படி ஆணையிட்டானாம். கொழுமோர்ப் பிரயோகம்ää கற்பாறைகளையும் உடைக்கும் பண்டைக்கால விஞ்ஞானப் பிரயோகம்ää அதாவது குளக்கட்டில் நெருப்பை எரித்து சூடேற்ற வேண்டும். நன்கு சூடேறிய பின் அந்த இடத்தில் மோரைக்கரைத்து ஊற்ற வேண்டும். அப்படிச் செய்யும் போது குளக்கட்டில் வெடிப்பு ஏற்படும். இப்படி செய்த போது குளக்கட்டு வெடித்து நீர் கசிந்து ஓடத்தொடங்கியது. அது பெரிய குளமாதலால் குளத்திலுள்ள பெரிய மீனொன்று வெடிப்பை அடைத்துக்கொண்டதாம். அந்த மீனை வெட்டி வெளியேற்றும் படி அரசர் ஆணையிட்டாராம். இதனை செய்ய அஞ்சி யாரும் முன்வரவில்லை. ஒரு பறையன் துணிந்து முன் வந்தானாம். அதனைச் செய்யும் போது வெள்ளம் புரண்டு தன்னை அள்ளிக் கொண்டு போகும் என்பதை உணர்ந்த அவன் தனது அங்கங்கள் எங்கெங்கு கிடக்கின்றனவோ அங்கெல்லாம் தன் பெயர் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டு பறையன் அந்த மீனை வெட்டி குளத்தை திறந்தான். வெள்ளம் புரண்டு பறையனை அள்ளிக் கொண்டு சென்று சிதைத்துத் தள்ளியது. மாற்றான் படையும் சிதைந்து அழிந்ததாம். பறையன் கேட்டுக் கொண்டபடி அவனுடைய அங்கங்கள் சிதறிக்கிடந்த இடங்களுக்கு பறையன்குளம்ää பறையன்வெளிää பறையனோடைää பறையனாறு என்று பெயரிடப்பட்டதாக திரியாயில் ஓய்வு பெற்ற கிராமத்தலைவர் திரு.சி.பூ.பொன்னம்பலமவர்கள் தகவல் தந்துதவினார்கள். இந்தப் பறையனாறுதான் தென்னமரவாடிப் பிள்ளையார் கோவிலுக்குச் சமமாக ஓடுகின்றது. இதுவே கிழக்கு மாகாண எல்லையாகும்

Saturday, 14 November 2015

vilkam vikarai

த்தாம் நூற்றாண்டின் நாலாம் காற்பகுதி தொடக்கம் சுமார் 70 ஆண்டு காலம் இலங்கையில் சோழர் ஆட்சி நிலவியது. இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தன் என்பவன், சோழர்களுக்கும் அவர்களின் பகைவர்களான பாண்டியர், சேரர் ஆகியோருக்கும் இடையிலான போட்டியில் சோழரின் பகைவர்களுக்கு ஆதரவு கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால் சோழ மன்னனான முதலாம் இராஜராஜன் இலங்கையின் மீது படையெடுத்து தலை நகரமான அனுராதபுரத்துடன் சேர்த்து நாட்டின் வட பகுதியைக் கைப்பற்றிக் கொண்டான். அனுராதபுரத்தைக் கைவிட்டுப் பொலன்னறுவை என்னும் இடத்தைத் தலைநகரம் ஆக்கினான். சோழர் ஆட்சிக்குட்பட்ட இலங்கையின் பகுதி மும்முடிச் சோழ மண்டலம் எனப் பெயரிடப்பட்டு, தலைநகரான பொலன்னறுவையும் ஜனநாதமங்கலம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
கி.பி 1017 ஆம் ஆண்டில், பாண்டியன் இலங்கையில் மறைத்து வைத்திருந்த மணிமுடியையும், செங்கோலையும் கைப்பற்றுவதற்காக முதலாம் இராஜராஜன் படைகளை அனுப்பி முழு இலங்கையையும் சோழர் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தான். இந்த ஆட்சி கி.பி 1070 வரை நீடித்தது.
கி.பி 10 ஆம் நூற்றாண்டில் சோழரது நேரடி ஆட்சி இலங்கையில் ஏற்பட்டபோது நாகநாட்டில் இருந்த( தற்போதைய வடகிழக்கு மாகாணம்) தமிழ் அரசும் அவர்களது ஆதிக்கத்துக்கு உட்பட்டது என வரலாற்றாதாரங்கள் மூலம் அறிய முடிகிறது. சோழப்பேரரசின் படையெடுப்பின் மூலம் இப்பிரதேசம் இராஜராஜனின்(கி.பி 985 - கி.பி 1014) ஆதிக்கத்தின்கீழ் வந்தபின் 'இராஜராஜ சதுர்வேதி மங்கலம்' என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. (சோழர் ஆட்சியின் கீழ் தமிழ்ப் பௌத்தர்களால் நிர்வகிக்கப்பட்ட விகாரை இராசராசப் பெரும் பள்ளியெனப் பெயர்மாற்றம் செய்யப்படதுபோல்) அதன் பின்னர் அவரது மகன் இராஜேந்திரன் (கி.பி 1012 - கி.பி 1044) காலப்பகுதியில் திருகோணமலை நகரம்இராஜ ராஜ சதுர்வேதி மங்கலம்(கந்தளாய்) என்பவற்றை உள்ளடக்கிய பிரதேசம் 'இராஜேந்திர சோழவழநாடு' என அழைக்கப்பட்டிருக்கிறது.
கந்தளாய், திருகோணமலையில் இருந்து கண்டி செல்லும் பாதையில் நாற்பது கிலோமீற்றரில் அமைந்திருக்கும் ஊர். இலங்கையின் மிகப்பெரிய விவசாய நிலங்களைக் கொண்ட பிரதேசங்களில் ஒன்றாகக் கந்தளாயும் கருதப்படுகிறது. பண்டைய நாட்களில் கந்தளாயில் 'சதுர்வேதி மங்கலம்' என்றழைக்கப்பட்ட பிரதேசம் இருந்தது. இங்கு நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த அந்தணர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு இப்பிரதேசம் வரியில்லாமல் வழங்கப்பட்டிருக்கிறது. இங்கிருந்த குடியேற்றம் அளவில் பெரிதானதாகவும், அதிகாரம் கொண்டதாகவும் அமைந்திருந்தது என அறியமுடிகிறது.
கி.பி 1010 ஆம் ஆண்டி ல் இங்கு இராசேந்திர சோழனால் சிவன் கோவில் கட்டப்பட்டது. அப்புராதானக் கோயிலின் சிதைந்த பாகங்களைக்கொண்ட சிவன் பார்வதி சிலை, தூண் சிதைவுகள் , ஆவுடையார் போன்றவை இன்றும் அக்கோயிலின் வரலாற்றுத் தொன்மைதனை பறைசாற்றி நிற்கிறது.
வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் இங்கிருந்த ஆலயம் பிரசித்தமானதாகவும், பலர் ஒன்றுகூடி அமர்ந்து கலந்துரையாடக்கூடிய மண்டபங்களைக்கொண்ட பிரமாண்டமானதாகவும் இருந்திருக்கவேண்டுமென அறியமுடிகிறது. கந்தளாயிலுள்ள பேராறு எனுமிடத்தில் அமைந்திருக்கும் இவ்வாலச் சிதைவுகள் 1950ம் ஆண்டு காலப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அவ்விடத்தில் அமைக்கப்பட்ட சிவனாலயத்தையே மேலுள்ள படத்தில் காண்கிறீர்கள்.

இவ்வாலச் சூழலில் கண்டெடுக்கப்பட்ட பல சாசனங்களில் இருந்து இவ்வாலயத்தின் சிறப்பையும் இங்குவாழ்ந்த மக்களது சமய, பண்பாட்டு நடமுறைகளையும், இப்பிரதேசத்தில் நிலவிய அரசாட்சி பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது.
 
அங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் சொல்லும் செய்திகளின் சுருக்கம்.
 
01. இராஜராஜ சதுர்வேதி மங்கலத்தின் ஊராட்சி அமைப்பான பெருங்குறி(மகாசபை) பெருமக்கள் ஒரு இரவு ஒன்றுகூடி விக்கிரம சோழ வாய்க்கால் தொடர்பாக எடுத்த தீர்மானத்தின் பதிவுகளையே ஒரு கல்வெட்டு சொல்கிறது.இதனை ஆராய்ந்த கலாநிதி.கா.இந்திரபாலாவின் கருத்துப்படி கி.பி 1033 மாசி 13ம் திகதி/ கி.பி 1047 மாசி 10 ம் திகதி இம் மகாசபைக்கூட்டம் நிகழ்ந்திருக்கவேண்டுமெனக் கருதுகிறார்.
 
02. இங்குள்ள இன்னுமொரு சாசனம் முதலாம் விஜயபாகு தேவரின் 42 ம் ஆட்சியாண்டிலே எழுதப்பட்டது.(கி.பி 1097) நங்கைசானி என்னும் பிராமணப்பெண் தனது கணவனின் நினைவாக சதுர்வேத மங்கலத்து விஜயராஜ ஈஸ்வரம் என்னும் ஆலயத்தில் ஏற்படுத்திய அறக்கட்டளை பற்றிய விவரங்களை அது வர்ணிக்கிறது.
 
03.கி.பி 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது கி.பி 1103 ஆண்டுக்குரியதான கல்வெட்டில் கந்தளாய் என்றே அக்காலத்தில் இப்பிரதேசம் அழைக்கப்படதாக அறிய முடிகிறது. அத்துடன் பொலநறுவையை ஆட்சி புரிந்த விஜயபாகு தனது 37ம் ஆட்சியாண்டில் தானமளித்தான் என்பதையும் அறியமுடிகிறது. இதுவரை இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இதில்தான் முதன் முறையாக திருப்பள்ளியெழுச்சி, திருப்போனகம் என்னும் சொற்பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் குறிப்பிடுகிறார்.
 
 இவை தவிர சோழ இலங்கேஸ்வரன், சோழர்களின் ஆட்சிமுறை, என்பனவற்றோடு தமிழர்களின் தொன்மையையும் ஆதாரப்படுத்தி நிற்கும் இச்சாசனங்கள் அரிய பொக்கிசங்களாகும். 

இராசராசப் பெரும் பள்ளி

 




(இராசராசப் பெரும்

பள்ளி / வெல்கம் விகாரை)




(கல்வெட்டுக்கள்)

(விலையுயர்ந்த ஆபரணங்கள், முக்கியமான பொருட்கள் என்பனவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க பயன்படுத்தியதாகக் கருதப்படும் பொருட்கள்)

(நீர்த் தொட்டி)

(மருத்துவத் தொட்டி)


திருகோணமலை நகரத்தில் இருந்து வவுனியா செல்லும் பாதையில் கன்னியா வென்னீரூற்றைத் தாண்டி வரும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பிரதேசம் இராசராசப் பெரும் பள்ளி / வெல்கம் விகாரை. இதனுடைய வரலாற்றுப் பின்னணி அறியப்படவேண்டியதாகும்.

திருகோணமலையில் இந்து - பௌத்த மத முரண்பாடு கி.பி 3ம் நூற்றாண்டில் மகாசேனன் திருக்கோணேச்சரத்தை அழித்து கோகர்ண விகாரையை நிறுவ முற்பட்டதுடன் தீவிரம் பெறுகிறது.
'மகாசேனனின் துன்புறுத்தல் காரணமாக தற்காலிகமாகவே இந்து ஆலயங்கள் அழிக்கப்ட்டது. பௌத்த மதம் இந்து மத்ததுடன் போட்டி போட்ட போதும் பௌத்த மதம் துறைமுக நகரான திருகோணமலையில் இருந்து பின்வாங்க வேண்டி இருந்தது.' என்ற பேராசிரியர் சேனக பரணவிதானவின் கூற்றும், 'சோழர்கள் இலங்கையில் பல பௌத்த பள்ளிகளை அழித்ததார்கள்' என்ற சூளவம்சத்தின் கூற்றும் அக்காலத்தில் இருந்த மதமுரண்பாட்டை விளக்குவதாக இருக்கிறது.

வெல்கம் விகாரை என்னும் இந்தப் பௌத்தப் பள்ளியின் தோற்றம் பற்றிய தெளிவான வரலாற்றுத் தகவல்கள் இல்லையாயினும் , இது சோழருடைய படையெடுப்புக்கு( 10 ம் நூற்றாண்டு) முன்னமே இருந்திருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது.

சோழருடய ஆட்சியின் கீழ் திருகோணமலை வந்தபின் இதன் பெயர்இராசராசப் பெரும்
பள்ளி
 என சோழ ஆட்டசியாளர்களால் மாற்றப்பட்டிருக்கிறது. இங்கு கிடைக்கப் பட்ட அதிகளவான அறக்கொடைச் சாசனங்கள் தமிழ் மொழியில் இருப்பதும் , சோழ ஆட்சியாளர்களால் இவ்விகாரை பாதுகாக்கப்பட்டு, ஆதரவளிக்கபட்டமையையும் ( இராசராச சோழன் 84 பசுக்களைத் தானம் செய்தார் - வரலாற்றுச் சாசனம்) வைத்துப் பார்க்கும் போது வெல்கம் விகாரை தமிழ் பௌத்த துறவிகளால் நிர்மானிக்கப்பட்டு , நிர்வக்ககப்பட்டு வந்திருக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது

vanni

9) கரும்புள்ளியான் :-
பாண்டியன் குளத்திலிருந்து மல்லாவி செல்லும் வீதியில் கரும்புளியங்குளம் என முன்னர் அழைக்கப்பட்ட இடம் இன்று கரும்புள்ளியான் என திரிபடைந்து அழைக்கப்படுகிறது. கரும்புள்ளியான் குளக்கட்டு ஆரம்பிக்குமிடத்திற்கு 500 மீற்றர்கள் முன் உள்ள திட்டையாக அமைந்த பகுதியில் வீதியின் இரு மருங்கிலும் கருங்கற்களும், செங்கற்களும் கொண்டு அமைக்கப்பட்ட கோயிற்கட்டட இடிபாடுகளும் மட்பாண்ட எச்சங்கள் பலவும் நிலத்தின் வெளிப்புறத்தே சிதறிக் கிடக்கிறது.

தற்போது அவ்விடத்தில் சில வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட சிவாலயம் ஒன்றுள்ளது. இச்சிவாலயம் அமைந்துள்ள காணிப்பரப்பினுள் ஏராளமான மட்பாண்டச் சிற்பங்களின் சிதைவுகளும், கருங்கற் பாறையினால் செதுக்கப்பட்ட கற்றூண்கள் மேடைவடிவப் பாறைகளும் தென்படுகிறது. ஆலயத்தின் நேர் கிழக்கில் 100 மீற்றர் தூரத்தில் பழைய பாழடைந்துபோன கேணி அமைப்பு ஒன்றும் காணப்படுகின்றது. இதன் படிகள் கருங்கற் பாறைகளைக் கொண்ட அமைக்கப்பட்டிருப்பதோடு 15 அடி ஆழத்திற்கு மேற்பட்டதாகவும் காணப்பட்டது.
20 வருடங்களுக்கு முன்னர் காணி உரிமையாளர் இவ் கோணியை தோண்டிப் பார்க்க முற்பட்டபோது அதனுள் இருந்து சில சிற்பங்களும், மட்கலங்கள், சில உலோகப் பாத்திரங்களும் வெளி;ப்பட்டன. அனால் அன்றைய காலத்தில் அச்சங்காரணமாக மேலும் தோண்டாமல் இக்கேணியை விட்டுவிட்டனர். அதனுள் குப்பை கூழங்களைப் போட்டு கேணியை நிரப்பிவிட்டனர். தனியாருக்குச் சொந்தமான காணிகளாகவே இருந்ததனால் எந்நேரமும் யாரவும் சென்று பார்ப்பது சிரமமானதே தற்போது தூர்த்தழிக்கப்பட்ட நிலையில் காணப்படும் அவ்விடம் சிறிய நீர்தேங்கும் குட்டை போன்று காட்சியளிக்கிறது.
அநேகமாக இக்கேணியினை அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்துவதன்மூலம் மேலும் ஏராளமான தொல்லியற் பொருட்களைப் பெற்றுக்கொள்ளமுடியும். அதன்மூலம் இப்பிரதேசத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும் பற்றியதான தகவல்களைத் துல்லியமாக அறியமுடியும்.  பயிற்செய்கையின் பொருட்டு இப்பகுதியிலிருந்த ஏராளமான தொல்லியற் சான்றுகள் சிதைவடைந்த போதிலும் வீதியாற் செல்பவர்கள் இலகுவாக அடையாளங் காணப்படக்கூடிய வரலாற்றுத் தொல்லியற் தளமாகவே இதைக்கணிக்கமுடியும்.
நீண்டகாலமாக கவனிப்பாரற்று ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல் இருந்த இவ்விடம் தற்போதுதான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியலாளர் புஸ்பரட்ணம் அவர்கள் நேரடியாகப் பார்வையிட்டதோடு தொல்லியற் சான்றுகளைப் படியெடுத்து ஆய்வுக்கு உட்படுத்துவதற்கான செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கிறார்.
இங்கே கண்டெடுக்கப்பட்ட சுடுமண் சிற்பங்கள் இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தாய்த்தெய்வ வழிபாட்டு உருவங்களாகவே கணிக்கப்படுகிறது. இவ்தொல்லியற் தடயப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்தின் ஆவுடையார் பகுதி பல்லவர்கால (7-9 நூற்றாண்டு) காலப்பகுதிக்குரிய கலைவடிவமாகவே தென்படுகிறது. அத்தோடு கருங்கற்களாலான கயலட்சுமி வடிவம் பொறிக்கப்பட்ட எல்லைக்கற்கள் சிலவும் அங்கே கண்டெடுக்கப்பட்டது. கயலட்சுமி வடிவம் பொறிக்கும் முறை 12 நூற்றாண்டு காலப்பகுதியைச் சேர்ந்ததாகவே பொதுவாகக் கணிக்கப்படுகிறது.
ஆகவே இப்பிரதேசம் நீண்ட தொடர்ச்சியான மக்கள் வாழ்விடமாக இருந்ததற்காக வலுவான சான்றாதாரமாக கொள்ளலாம். இலங்கையின் வரலாற்றுக் காலங்களில் உத்தரதேசம் என அழைக்கப்பட்ட நாகவம்ச ஆட்சிக்காலத்தில் முக்கியமான ஆட்சிமையங்களின் பகுதியாக இது இருந்திருக்கக் கூடும் ஏனெனில் இதன் மேற்குத்திசையில் கல்விளானில் ஓர் குடியிருப்பு மையமும், தெற்கில் பனங்காமம் மையமும், கிழக்கில் பாலிநகர மையமும் (வவுனிக்குளம்), வடக்கே மல்லாவியில் ஒரு மையமுமாக இவ்விடத்திலிருந்து ஐந்து மைல் சுற்றிளவிற்குள் நாற்புறமும் குடியிருப்பு மையங்கள் இருப்பதனை நோக்குமிடத்து மேற்குறிப்பிட்ட முடிவுக்கு வருவது இயல்பானதே.  ஆகவே இப்பகுதி விரிவான ஆய்வுக்குட்படுத்துவதன் மூலம் வட இலங்கையின் மனிதக்குடியமர்வுகள்ளின் ஆரம்பகாலம் பற்றிய சான்றாதாரங்கள் கிடைப்பதற்கான சாத்தியங்கள் பல உள்ளன.
10) பனங்காமம் :-
வன்னியின் ஆதிக்குடியிருப்புகளில் ஒன்றான பனங்காமம் கிராமத்தின் சுற்றுப்புறமெங்கும் ஏராளமான தொல்லியற் சான்றுகளைக் காணமுடியும். கருங்கற்றூண்கள், செயற்கையாக உருவாக்கப்பட்ட மண் திடல்களும், வட்டவடிவமாக நிறுவப்பட்ட கற்றூண்கள், மட்பாண்டத் துண்டங்கள், கட்டடச் சிதைவுகள், போன்றவற்றை காணமுடியும்.

பறங்கியாற்றின் கிழக்குப்புறத்தில் அமைந்துள்ள பனங்காமமும், அதற்கு அருகிலுள்ள இளமருதங்குளப் பகுதியிலும் காணப்படுகின்ற கட்டட இடிபாடுகள் இன்றுவரை முறையான தொல்லியற் பகுப்பாய்வுக்குட்படுத்தப்படவில்லை. இவ்வாறே பறங்கியாற்றின் மேற்குப்பகுதியில் நாட்டப்பட்ட நிலையிலிருக்கின்ற கற்றூண்களும், செயற்கையாக உருவாக்கப்பட்ட மண் திட்டுக்களும், அக்காலப்பகுதியின் முக்கிய மனிதர்களின் சவஅடக்கவிடமாவோ அல்லது நினைவிடங்களாகவோ இருக்கலாமென ஊகிக்கக் கூடியவகையிலான அமைப்பு முறைகளே அப்பகுதியில் காணப்படுகின்றது.
மேலும் பனங்காகம்  சிவன் கோயில் சுற்றுவட்டமும் மிக மக்கியமான தொல்லியற் சான்றுகளைக் கொண்ட பகுதியாக காணப்படுகிறது. சிவன்கொயிற் சுற்றாடலில் மண்ணுள் புதையுண்டு காணப்படுகின்ற கட்டட இடிபாடுகள் சோழர்கால கட்டடக்கலை வடிவமைப்பை கொண்டிருக்க கோயிலினுள்ளே இருக்கின்ற சிவலிங்கம் பல்லவர்காலத்தில் அதாவது 7ம்-8ம் நூற்றாண்டுகளில்  வடிவமைக்கப்பட்ட சிற்ப வடிவமைப்பைக் கொண்டிருப்பதோடு சிவலிங்கத்தை மிக உற்று நொக்கினால்அதில் ஒரு வேல் வடிவம் பொறிக்கப்பட்டு தலைப்பகுதியில் ஒரு முக வடிவம் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இவ்வகை சிவலிங்கம் பல்லவர் காலத்திற்குரியதென தொல்லியலாளர் புஸ்பரட்ணம் அவர்கள் கூறுகிறார்.
மேலும் இச்சிவன் கோயிலின் சுற்றுப்புறத்தில் காணப்படுகின்ற மட்பாண்ட ஓடுகளும், மட்பாண்டச் சின்னங்களும் பெருங்கற்காலப்பண்பாட்டு நாகரிக காலத்திற்குரியதென குறிப்பிடப்படுவதனால் பனங்காமம் பகுதி மிக நீண்ட தொடர்ச்சியான தமிழ் மக்கள் வாழ்ந்ததற்கான சான்றாதாரங்களை இன்று தரக்கூடிய அல்லது பறை சாற்றுகின்ற இடமாகவே கொள்ளப்படுகிறது.
சோழர் ஆட்சியின் தொடர்சியாக வன்னிக்குறுநில மன்னர்களின் ஆட்சியியல் மையமாக பனங்காமம் இருந்தமையை நவீன வரலாற்றுப்பதிவுகள் உறுதி செய்வதும் பனங்காமத்தில் மிகச்சிறந்த ஆட்சியாளனாக வன்னியர் திலகம் என்றழைக்கப்பட்ட கைலாயவன்னியனார் அரை நூற்றாண்டுகள் ஒல்லாந்தருக்கு அடிபணியாமல் ஆட்சி செய்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

எனினும் நீண்ட தொடர்ச்சியான தமிழ்மக்களின் வாழிடமாக கருதப்படுகின்ற பனங்காமமும், அதன் சுற்றுப்புறமும் உள்ள புராதன குடியிருப்புக்களும் அவற்றின் தோற்றம் பற்றியதான உறுதிபடக்கூறக்கூடியவாறான தொல்பொருள் ஆய்வுகள் எதனையும் யாரும் முறையாக இதுவரை மேற்கொள்ளவில்லை.
தொடரும்…