பாண்டிய மன்னன் எழுதிச் சென்ற இரு கயல் இலச்சினை. இங்கே இவ்வாறு இருகயல் எழுதிச்சென்றான் பாண்டியன் என்ற செய்தியை தமிழகத்தின் குடுமியான் மலைச் சாசனம் உறுதி செய்கின்றது.
பிற்காலப் பாண்டிய பேரரசின் பேரரசன் முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சிகாலத்தில் (கி.பி 1251 - 1269/70) அவனோடு துணை ஆட்சி செய்த முதலாம் ஜடாவர்மன் வீரபாண்டியன் (கி.பி. 1253 - 1281) இலங்கை மீது படையெடுத்து வந்து இலங்கை மன்னரை தோற்கடித்து தான் அடைந்த வெற்றியை கொண்டாடு மகமாக திரிகூடமலையிலும் கோணமாமலையிலும் தன் வம்சத்து இலச்சியையான மீனைப் பொறித்துச் சென்றான். இதனை அவனது குடுமியாமலை சாசனம் இவ்வாறு குறிப்பிடுகின்றது
"அரைசு கெழுதாயம் அடையவாரி
கானா மன்னவர் கண்டு கண்டேங்க
கோணமாமலையிலும் திரிகூடக்கிரியிலும்
உருகெழு கொடிமிசை இருகயலெழுதி
எனை வெந்தனை ஆணை கொண்டு " - (குணசிங்கம்.செ,கோணேஸ்வரம்,பேராதனைப் பல்கலைக்கழகம், 1973, பக்.113- 114 , <<சரவணபவன்.க,வரலாற்றுத் திருகோணமலை,திருகோணமலை வெளியீட்டார்கள்,2003,பக்.180-1181)
கானா மன்னவர் கண்டு கண்டேங்க
கோணமாமலையிலும் திரிகூடக்கிரியிலும்
உருகெழு கொடிமிசை இருகயலெழுதி
எனை வெந்தனை ஆணை கொண்டு " - (குணசிங்கம்.செ,கோணேஸ்வரம்,பேராதனைப் பல்கலைக்கழகம், 1973, பக்.113- 114 , <<சரவணபவன்.க,வரலாற்றுத் திருகோணமலை,திருகோணமலை வெளியீட்டார்கள்,2003,பக்.180-1181)

No comments:
Post a Comment